Friday, May 3, 2013

காலை வேளை டென்ஷ‌ன்

இன்று காலையில் தீஷு ப‌ள்ளிக்குக் கிள‌ம்பிக் கொண்டிருந்தாள். குளித்து முடித்து வ‌ந்த‌வுட‌ன், சாப்பிட‌க் கொடுக்க‌ நான் காத்திருக்க‌, அவ‌ள்  ஏதோ செய்து கொண்டிருந்தாள். என்ன‌ ப‌ண்ண‌ற‌ என்று க‌த்திய‌வுட‌ன் (கேட்ட‌வுட‌ன்), உங்க‌ளுக்குப் பிறந்த‌ நாள் கார்டு ப‌ண்றேன்.

September -யில் வ‌ர‌யிருக்கும் பிறந்த‌ நாளுக்கு இந்த‌ நேர‌த்தில் தேவையா என்று கேட்ட‌வுட‌ன் சாப்பிட்டு விட்டு கிள‌ம்பி விட்டாள். அவ‌ள் சென்ற‌ பின்  டேபிளில் பார்த்தேன்.

Happy Birthday mom! I love you very much. I am happy to say you have a present என்று எழுதியிருந்தாள்.



காலை வேளை(லை)யில் கிள‌ம்ப‌ வேண்டுமென்று க‌த்தினாலும், பார்த்த‌வுட‌ன் வ‌ருத்த‌மாயிருந்த‌து. நிறைய‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள்  இப்ப‌டி ந‌டந்திருக்கிற‌து. கோப‌த்தைக் குறைக்க‌ வேண்டும். நினைப்ப‌தோடு ச‌ரி!!!

8 comments:

  1. குழந்தைகள் சில சமயம் நம் மனதை நெகிழ வைத்து விடுகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மனோ .. உண்மை தான்.. நன்றி வருகைக்கு..

      Delete
  2. மீன் குட்டிக்கு நிச்சல் சொல்லிதர வேண்டுமா? உங்களைப்போலவே கலையார்வம் உள்ளது.மேலும் சிறக்க வழிசெய்து கொடுங்கள்.இப்போதே சிந்திக்கும் இவள் இன்னும் பெரிய சிந்தனைகள் செய்து சிறப்புற செய்யுங்கள் சிறகடித்து பறக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவியாழி கண்ணதாசன்

      Delete
  3. அழகாகச் செய்துள்ளாள் தீக்ஷு, அவளுக்கு வாழ்த்துகள்!

    மற்றபடி என்ன சொல்ல..அப்டிதான் ஆகுது.. :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கிரேஸ்.. என்ன சொல்வது.. திட்டவும் முடிவதில்லை.. திட்டாமல் இருக்கவும் முடியவில்லை.

      Delete
  4. குழந்தைகளுக்கு நம் ஆவலாதிகள் புரியாது. ஒன்றை செய்ய நினைத்துவிட்டால் உடனே செய்து முடித்துவிட வேண்டும் அவர்களுக்கு.
    நாம் தான் கொஞ்சம் நிதானித்துக் கொள்ள வேண்டும்.
    எல்லா அம்மாக்களும் செய்யும் தவறுதான் இது. அதிகம் வருந்த வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்மா கருத்துக்கு.. ஆனால் எப்பொழுதும் திட்டிவிட்டு வருந்துவதே என் நிலைமை.

      Delete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost