Tuesday, March 29, 2011

ந‌ம்ப‌ர் லைன்

C.B.S.C ஸில‌ப‌ஸ் U.K.G க‌ணித‌ப்புத்த‌க‌த்தில் ந‌ம்ப‌ர் லைன் (Number line) வைத்து கூட்ட‌ல், க‌ழித்த‌ல் செய்வ‌து இருந்த‌து. ந‌ம்ப‌ர் லைன் என்பது ஸ்கேல் போன்று இருக்கும். ஒன்று, இர‌ண்டு என்று வ‌ரிசையாக‌ எழுதி இருக்கும். 3 + 2 என்று கூட்ட‌ல் செய்வ‌த‌ற்கு, முத‌ல் எண் மூன்றிற்கு சென்று, பின் இர‌ண்டாம் எண் இர‌ண்டிற்கு இர‌ண்டு எண்க‌ள் முன்னால் சென்று 5 என்று விடை காண‌வேண்டும். தீஷுவிற்கு பேப்ப‌ரில் ந‌ம்ப‌ர் லைன் வைத்து செய்வ‌தை விட‌ குதிக்கும் ஆக்டிவிட்டியாக‌ மாற்றி விட்டேன்.

தீஷுவை 0 முத‌ல் 10 வ‌ரை வ‌ரிசையாக‌ டைல்ஸ்ஸில்(த‌ரையில்) எழுத‌ச் சொன்னேன். 3 + 2 என்ப‌த‌ற்கு முத‌லில் 0விலிருந்து மூன்று முறை குதித்து மூன்றாம் எண் டைல்ஸ் சென்றாள். அடுத்து இர‌ண்டு என்று சொன்ன‌வுட‌ன் இர‌ண்டு முறை குதித்து 5 என்று விடை எழுதினாள். இவ்வாறு இர‌ண்டு மூன்று முறை கூட்ட‌ல் செய்த‌வுட‌ன், க‌ழித்த‌ல் செய்தோம். 9 - 3 என்ற‌வுட‌ன் ஒன்ப‌தாம் எண்ணிற்கு சென்றாள். மைன‌ஸ் மூன்று என்ற‌வுட‌ன், ஒரு நிமிட‌ம் அவ‌ளாக‌வே யோசித்து பின்னால் வ‌ர‌ வேண்டும் என்று கூறி விட்டு விடை க‌ண்டுபிடித்தாள். கூட்ட‌ல் என்றால் என்ன‌, க‌ழித்த‌ல் என்றால் என்ன‌ என்று அவ‌ளுக்குப் புரிந்து இருப்ப‌தைக் க‌ண்டு என‌க்கு ம‌கிழ்ச்சி.

ந‌ம்ப‌ர் லைன் இவ்வாறு த‌ரையில் எழுதி செய்த‌தில் வேக‌மாக‌ சோர்வடைந்து விட்டாள். ஆனால் மிக‌வும் விருப்ப‌மாக‌ விளையாண்டாள்.

Wednesday, March 23, 2011

தூக்கிப்போடும் முன்

என் வாழ்நாளை தீ.மு, தீ.பி என பிரித்துவிடலாம். தீமு - தீஷுவிற்கு முன், தீபி - தீஷு பிறந்ததற்குப் பின். முன்பு எனக்கு வீட்டில் தேவையில்லாத பொருள் இருக்கக்கூடாது. ஆனால் இப்பொழுது எந்த பொருளைத் தூக்கிப் போடும் முன்னும் அதை வைத்து தீஷு விளையாடுவாளா என்று ஒரு நிமிடம் தோன்றி மறு நிமிடம் சேர்த்து வைத்து, வீடு முழுவதும் ஒரே பொருட்களின் குவியல்.

வீடு கட்டும் பொழுது, டைல்ஸ் தேர்ந்து எடுப்பதற்கு கொடுத்த புத்தகங்கள் இரண்டு மூன்று புத்தக அலமாரியில் இருந்தன. எதற்கு வைத்திருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. தூக்கிப் போடும் இவற்றைச் செய்தோம்.




ஒரு புத்தகத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு பெரிய படமும், அதன் கீழே அந்த படத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருந்த டைல்ஸுகளின் சிறிய படங்களும் கொடுக்கப்பட்டு இருந்தன. ஐந்து பெரிய படங்களையும், அந்த படங்களின் சிறிய அளவு டைல்ஸையும் வெட்டி எடுத்துக் கொண்டேன். பெரிய படங்களை வரிசையாக தரையில் அடுக்கி வைத்துக் கொண்டோம். ஒவ்வொரு சிறிய படங்களாக எடுத்து அது எந்த பெரிய படத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று பொருத்தினோம். தீஷுவிற்கு மிகவும் பிடித்திருந்து மீண்டும் மீண்டும் விளையாண்டு கொண்டிருந்தாள்.

மற்றொரு புத்தகத்தில் இடை இடையே பெரிய அழகிய படங்கள் இருந்தன. அவற்றை 8 முதல் பத்து பஸில் பீஸாக வெட்டி கொண்டோம். வெட்டிய பகுதிகளை இணைத்து மீண்டும் பெரிய படம் உருவாக்க வேண்டும் (பஸில் போல).

தீஷு இர‌ண்டு மூன்று நாட்க‌ள் திரும்ப‌ திரும்ப‌ எடுத்து விளையாடி ஆச்ச‌ரிய‌ப்ப‌டுத்தினாள். இதேப் போல் பழைய‌ காலெண்ட‌ர்க‌ளிலும் செய்ய‌லாம்.

Tuesday, March 22, 2011

ஒற்றையா இர‌ட்டையா?

விளையாடுவ‌து குழ‌ந்தைக‌ளின் விருப்ப‌மான‌ வேலை. விளையாட்டின் மூல‌ம் அவ‌ர்க‌ளுக்கேத் தெரியாம‌ல் நிறைய‌ க‌ற்றும் கொள்வார்க‌ள். சிறு வ‌ய‌தில் என் விருப்ப‌மான‌ விளையாட்டுக‌ளில் ஒன்று ஒற்றையா, இர‌ட்டையா.

புளிய‌ங்கொட்டைக‌ள் வைத்து விளையாடுவோம். இருக்கும் புளிய‌ங்கொட்டைக‌ளை ச‌ம‌மாக‌ பிரித்துக் கொள்ள‌ வேண்டும். ந‌ம் ப‌ங்கில் சிறிதை கையில் எடுத்து ந‌ம் அருகில் இருப்ப‌வ‌ரிட‌ம் ஒத்தையா இர‌ட்டையா என்று கேட்க‌ வேண்டும். அவ‌ர் சொன்ன‌வுட‌ன், ந‌ம் கையில் இருக்கும் கொட்டைக‌ளை இர‌ண்டு இர‌ண்டாக‌ வைக்க‌ வேண்டும். அவ‌ர் சொன்ன‌து ச‌ரியாக‌ இருந்தால், ந‌ம் கையில் எடுத்த‌ அனைத்தையும் கொடுத்து விட‌ வேண்டும். த‌வ‌றாக‌ இருந்தால் அவ‌ரிட‌ம் அதே அள‌வு பெற்றுக் கொள்ள‌ வேண்டும்.


தீஷுவிற்கு Counting by 2 சொல்லிக் கொடுப்ப‌த‌ற்கு ஒற்றையா இர‌ட்டையா விளையாட‌ ஆர‌ம்பித்தோம். இர‌ண்டு இர‌ண்டாக‌ வைப்ப‌த‌ற்கு ப‌திலாக‌ இர‌ண்டு இர‌ண்டாக‌ எண்ண‌ வேண்டும். இந்த‌ எளிதான‌ விளையாட்டு மூல‌ம் மிக‌வும் எளிதாக‌ இர‌ண்டு இர‌ண்டாக‌ எண்ண‌ ப‌ழ‌கிக் கொண்டாள். அது ம‌ட்டும் இல்லாம‌ல், நிறைய‌ க‌ற்ற‌ல்க‌ள் இந்த‌ விளையாட்டில் உள்ளன‌. காய்க‌ளை இருவ‌ருக்கு அல்ல‌து மூவ‌ருக்குப் பிரித்த‌ல் (வ‌குத்த‌ல்), இர‌ண்டு இர‌ண்டாக‌ எண்ணுத‌ல், வெற்றி தோல்வி, ஒரிரு காய்க‌ள் விளையாட்டின் ந‌டுவில் ந‌ம்மிட‌ம் இருந்தாலும் இறுதியில் வெல்லுத‌ல் போன்ற‌ன. தீஷுவிற்கும் விருப்ப‌மான‌ விளையாட்டுக‌ளில் ஒன்று.

Monday, March 21, 2011

த‌வ‌று

நான் Progress Report, Interested in Origami என்ற‌ த‌லைப்புக‌ளில் எழுதியிருந்த‌ இரு இடுகைக‌ளும் நான் என் ப்ரைவேட் ப்ளாகில் எழுதுவ‌த‌ற்கு ப‌திலாக‌ த‌வ‌றாக‌ இந்த‌ ப்ளாகில் எழுதி விட்டேன். ப்ரைவேட் ப்ளாக் பின்னாளில் தீஷு அவ‌ள் குழ‌ந்தைப்ப‌ருவ‌த்தைத் தெரிந்து கொள்வ‌த‌ற்காக‌ நாங்க‌ள் எழுதுவ‌து. நான் எழுதிய‌தை ப்ளாகில் ப‌டிக்கும் வ‌ழ‌க்க‌ம் இல்லாத‌தால் க‌மென்ட்ஸ் பார்த்த‌வுட‌ன் தான் நான் செய்த‌ த‌வ‌று புரிந்த‌து. இரு இடுகைக‌ளிலும் பிரெஸ்ன‌லாக‌ எதுவும் இல்லை என்றாலும், என் ம‌க‌ளுக்காக‌ எழுதிய‌தை இங்கு வைத்திருப்ப‌தில் என‌க்கு விருப்ப‌மில்லை. ஆகையால் எடுத்து விட்டேன். க‌மென்ட்ஸ் எழுதிய‌வ‌ர்க‌ள் புரிந்து கொள்வீர்க‌ள் என்று ந‌ம்புகிறேன். ந‌ன்றி.

Thursday, March 3, 2011

களிமண்

நாங்கள் சிறுவயதில் மதுரையில் இருந்தபொழுது களிமண் வைத்து விளையாண்டது நினைவில் உள்ளது. எங்கிருந்து எடுப்போம் என்று ஞாபகம் இல்லை. ஆனால் களிமண்ணால் அம்மி செய்தது, பூ ஜாடி செய்தது போன்றது நினைவில் உள்ளது.

தீஷுவிற்கு மண் அலர்ஜி. களிமண் தெரியவில்லை. மண்ணில் விளையாண்ட அதே நாளில் அவளுக்குக் கொம்பங்கள் வருவதால் களிமண் கொடுத்து சோதிக்க மனம் இருக்கவில்லை. கடையில் வாங்கிய Playdough சற்று நாட்களாகிவிட்டாலும் தீஷுவிற்கு அலர்ஜி உண்டாக்குகிறது. ஆகையால் வீட்டில் செய்வதே எங்களின் சாய்ஸ்.

களிமண் முன்பே செய்திருக்கிறோம். வெவ்வேறு கலரில் செய்ய வேண்டும் ஆனால் ஒரே தடவை மாவு பிசைவது போல் இருந்தால் தீஷுவிற்கு எளிதாக இருக்கும் என்று இணையத்திருந்து இந்த செய்முறை எடுத்தேன்.

தேவையானவை:

1 கப் கோதுமை மாவு / மைதா
1 கப் தண்ணீர்
சிறிது எண்ணெய்
Food colouring

கோதுமை மாவு, தண்ணீர், எண்ணெய் மூன்றையும் கட்டி இல்லாமல் கலந்து கொள்ள வேண்டும். கலவையை ஒரு தவாவில் ஊற்றி அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரங்களில் ஒட்டாமல் வரும் பொழுது (கிட்டத்தட்ட ஒரிரு நிமிடங்கள் கழித்து), அடுப்பிலிருந்து எடுத்து, மாவை மிருதுவாக பிசைய வேண்டும். எங்களிடம் நான்கு கலர்கள் இருந்தன. மாவை ஐந்தாக‌ப் பிரித்துக் கொண்டோம். கலரில் சிறிது தண்ணீர் ஊற்றி, மாவின் ஒரு பாகத்தில் ஊற்றி மீண்டும் நன்றாக பிசைய வேண்டும். பச்சை, சிகப்பு, மஞ்சள், ஆரெஞ்ச், கரும் பச்சை என ஐந்து கலர் உருண்டைகள் செய்தோம். இதுவரை இவ்வளவு மிருதுவான playdough செய்தது இல்லை.

தீஷு மனிதன், காரெட், கத்தரிக்காய், பாம்பு என இரண்டு மணி நேரம் செய்து கொண்டிருந்தாள். விளையாண்டு முடித்தவுடன் பழைய playdough டப்பாவின் போட்டு ஃப்ரிட்சில் வைத்து விட்டேன்.அன்று என்னிடம் காமெரா இல்லை. இன்று பத்து நாட்கள் ஆகி விட்டன. ஒரு நாள் மூன்று குழந்தைகள் அனைத்து கலர்களை கலந்து ஒரு மணி நேரம் விளையாண்டப்பின் சிறிதை கீழே போட்டுவிட்டேன். மீதமிருப்பது கீழே புகைப்படத்தில் உள்ளது.

மிருதுவாகவும் ப‌ல‌ வ‌ண்ண‌ங்க‌ளில் இருந்தாலும் இயற்கை களிமண்ணுக்கு ஈடாகாது என்பது என் எண்ணம்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost