Tuesday, May 31, 2011

குழந்தைக்கு மகிழ்ச்சி அளிப்பது..

1. நல்ல தூக்கம்
2. சத்தான உணவு
3. பெற்றோருடன் நேரம் செலவழித்தல்

போன்ற எளிய விஷயங்கள் தான் குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்று சமீபத்தில் ஒரு கட்டுரையில் படிக்க நேர்ந்தது. முழு விவரங்களுக்குThe simple key to a happy family revealed. முதல் இரண்டும் எளிதாக செய்துவிட முடிகிறது. ஆனால் நேரம் செலவிடுதல் என்பது கேட்பதற்கு எளிதாக தோன்றினாலும், ஓடுவதற்கே நேரம் சரியாக இருக்கும் கால கட்டத்தில் நான் முதலில் நிறுத்துவது குழந்தையுடன் செலவிடும் நேரத்தை தான். எதற்காக இப்படி வாழ்க்கையில் ஓடுகிறோம்?

Thursday, May 26, 2011

ஒரு பக்கக் கதை

கதை எழுதும் ஆர்வம் தீஷுவிற்கு வந்திருக்கிறது. கதைகள் எழுதி, அவைகளை தொகுத்து ஒரு புத்தகமாக்க வேண்டுமாம். அவள் சொல்ல நான் எழுதிய முதல் கதை. அவளுக்குப் பிடித்த Frog and Toad கதைகளைக் கலந்து அவள் சொல்லியிருக்கிறாள். அவள் சொல்லியது அப்படியே:

Toad and Frog are friends
------------------------------

Once upon a time, a frog and toad were in the house and frog came along and said, "We will go out. We are going to see when spring is coming". And toad came out of his house. And frog and toad went along walk and he saw a mailbox and the mailbox filled with a letter. And they saw whose name is this. And frog said this is your mailbox. I took a round for you and toad said ok.

Frog and toad went to toad's house. And they drank coffee. And that was yummy. "What is this coffee?". "I put complan" said toad. "Why did you put complan?" "Why means that will be very nice to eat.. so I did like that" said toad. And frog and toad went to mall. Frog said, "We will buy this dress and it will be beautiful to put for you. So only I buy this dress for you".

"I am going to go home. I have something to do. What means I am going to write a mail for you. What I am going to write is surprise.you see, that is surprise. I will not tell now. I am going to write a mail for you. You will like your letter" said toad.

The letter came. "You will read now". Dear frog, I am glad that you are my best friend. Whereever you are going, I will come with you. I will not leave you at all. And you will not leave me at all. You and I are friends. Why means we will share the things.So I will share with you and you will share with me. Frog said ok. Now both are friends.

நேற்று இரவு என் பெயரை திரும்ப திரும்ப எழுதிக் கொண்டிருந்தாள். நான் அவளிடம், My name is Dheekshitha. My father's name is என்று எங்கள் அனைவரின் பெயர்களையும் எழுத சொன்னேன். எழுதி முடித்தவுடன் மீண்டும் எழுத வேண்டும் என்றாள். அதற்கு பதிலாக சென்ற வாரம் சென்று வந்த பீச்சை பற்றி 2 வரி என்றவுடன், I went to beach. I saw so many pebbles and one shell என்று எழுதினாள். Beach, many, pebbles போன்றவைக்கு நான் உதவினேன். முடித்தவுடன் கட்டுரைக்கு கீழே My name is Dheekshitha and I am author என்று எழுதி வைத்திருக்கிறாள் :-)))

Wednesday, May 25, 2011

கவர்ந்த தருணங்கள் - 25/05/11

1. தீஷு என்னிடம், "இன்னைக்கு அப்பாவா சமைச்சாரு.. அதான் சூப்பரா இருக்கு..". அவளை நான் திரும்பி பார்த்தவுடன், கேள்வியின் பாதிப்பு புரிந்த அடுத்த விநாடி, "நீங்க சமைச்சா ரொம்ப சூப்பரா இருக்கும்.. அப்பானா வெறும் சூப்பர்.. அதான் கேட்டேன்".

2. என் கணவரிடம் நான், "வெறும் தயிர் வாங்க போய் இவ்வளவு செலவாகிடுச்சு பாருங்க..". எப்பொழுதும் போல் அவர் தலையை மட்டும் ஆட்ட, தீஷு, "தயிர் வாங்க போனா, அத மட்டும் பாக்கணும், மத்த எல்லாத்தையும் பாத்தா இப்படித்தான்".. ஒருவர் மனதிற்குள் சிரித்தது எனக்கு வெளியில் வரைக்கும் கேட்டது.

3. என் கணவரிடம் நான், "பருப்பெல்லாம் ரொம்ப இருக்கு.. கொஞ்ச நாளைக்கு இந்தியன் ஸ்டோர்ஸ் போகாம ஏதாவது வேணும்னா யாராவது போகும் போது வாங்கிட்டு வர சொல்ல வேண்டியது தான்"..

தீஷு, "எதுக்கு யாரோ நமக்காக வாங்கிட்டு வரணும். நம்ம ஏன் போகக்கூடாது?"
நான், "ரொம்ப தூரத்துல கடை இருக்கு... எல்லாம் நிறைய இருக்கு.. ஒன்று இரண்டு வாங்கிறது எதுக்கு அவ்வளவு தூரம் போகணும்"
தீஷு, "அந்த இல்லாதது இல்லாம சமைக்க் முடியாதா.. எதுக்கு யார்கிட்டையாவது சொல்லி விடணும்?"
நான், " நான் சமைக்கவே போறது இல்லை.. விடு"
தீஷு (பாவமாக வைத்துக் கொண்டு)"அப்ப நான் பசிக்கிதுனு சொன்னா, என்னம்மா செய்வீங்க?"

4. நானும் தீஷுவும் வீட்டிற்கு பின்னால், தக்காளி விதை விதைத்து வைத்தோம்.
தீஷு,"தக்காளி வந்தவுடனே, நம்ம கடையில தக்காளி வாங்கவே வேண்டாம்"
நான்,"நிறைய அணில் இருக்குடா...அது எல்லா தக்காளியையும் சாப்பிட்டு விடும்"
தீஷு, "நம்ம சாப்பிடற மாதிரி அதுவும் கொஞ்சம் சாப்பிடட்டும்மா"

புல்லரிக்க வைக்கிறீயேடா..

5. அப்பா அவளிடம் சில வித்தியாசமான கேள்விகள் கேட்பார். அப்படி ஒன்று. "ஒரு பையனுக்கு வலது கையில அடிப்பட்டுச்சுனா எப்படி எழுதுவான்?"
தீஷு: " லெஃப்ட் ஹாண்டுல எழுதலாம். அவங்க அம்மாகிட்ட எழுத சொல்லலாம். மிஸ்கிட்ட எழுத முடியாதுனு சொல்லலாம். கையில சீக்கிரம் புண்ணு ஆறதுக்கு மருந்து போட்டுக்கிடலாம்".
அப்பா,"ஓ டாக்டர்கிட்டவா? "
தீஷு:"சின்ன புண்ணுக்கு எதுக்கு டாக்டர், தேங்காய் எண்ணெய் போட்டா போயிடும்.."

அம்மா உங்க டிரெயினிங்கா?

Monday, May 23, 2011

கலர் சூரியன்



வீட்டிற்கு பெயிண்ட அடிக்க கலர் தேர்ந்தெடுக்க கலர் அட்டைகள் hardware section யில் இருக்கும். ஒரு அட்டையில் ஒரு கலரின் வெவ்வேறு சேடுகள் (Shades..சாரி சேடுக்கு தமிழ் வார்த்தை தெரியவில்லை) இருக்கும். மாண்டிசோரியின் மூன்றாவது கலர் பாக்ஸில் (colour box 3), ஒரு கலரின் வெவ்வேறு சேடுகளை அதன் கலர் அளவு அடிப்படையில் அடுக்க வேண்டும் (from dark to light shades or light to dark shades of the same colour). மாண்டிசோரியின் பாக்ஸ் 3 செய்தோம். முன்பே பள்ளியில் செய்திருக்க வேண்டும். எளிதாக செய்தாள்.



நான் கடையிலிருந்து எடுத்து வரும் பொழுது, ஒரு கலரில் இரண்டு அட்டைகள் எடுத்து வந்துவிட்டேன். முன்பு செய்து போல் மாட்சிங் செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால் தீஷுவிற்கு எளிதாக இருக்கும் என்று தோன்றியது. அதனால் அனைத்து அட்டைகளையும் இணைத்து வாகிங் போகும் பொழுது எடுத்துக் கொண்டு சென்றோம். ஏதாவது பொருள் எங்கள் அட்டையில் இருக்கும் கலரில் ஒத்து இருந்தால் அந்த கலரை அட்டையில் டிக் செய்து கொண்டோம். தீஷுவிற்கு மிகவும் பிடித்திருந்தது. இரண்டு மூன்று நாட்களுக்கு எங்கு சென்றாலும் கலர் அட்டைகளை எடுத்துக் கொண்டு வந்தாள். அவள் கமெண்ட் : எப்ப வாகிங் போனாலும் வெறும் க்ரீன் மட்டும் தான் இருக்கிற மாதிரி தெரியும். நம்ம world ல எவ்வளவு கலர் இருககுமா.. ok. Mission accomplished.

Wednesday, May 18, 2011

உலக உருண்டையும் பறவைக் கூடும்

விழா முடிவில் பொருள்கள் மிச்சமாவதை தடுக்க முடியாது. இந்த முறை தீஷுவின் பிறந்த நாள் விழா முடிந்தவுடன், மிகுந்து இருந்தது வெடிக்காமல் இருந்த பலூன்கள். அவைகளை வைத்து ஆக்டிவிட்டீஸ் செய்தோம்.



அவளுக்கு வந்த கிஃப்ட் ஒன்றில், கிஃப்ட உடையாமல் இருப்பதற்காக டிரேஸ்சிங் பேப்பர் போன்ற மெல்லிய கலர் காகிதம் ஒன்று இருந்தது. அந்த காகிதத்தை சிறிது சிறிதாக கிழித்துக் கொண்டோம். பசையை எடுத்து அதில் சரி பாதி தண்ணீர் கலந்து கொண்டோம். பலூனை ஒரு கிண்ணத்தில் வைத்துவிட்டு, பலூன் மீது தண்ணீர் கலந்த பசையைத் தடவி, அதில் கிழித்த காகிதத்தை ஒட்டிக் கொண்டு வந்தோம். வரிசையாக ஒட்ட வேண்டும் என்பதில்லை.

முழு பலூனையும் முடித்தவுடன், மூன்று மணி நேரம் வரை காய விட்டோம்.



நன்றாக காய்ந்தவுடன், பலூனில் சிறு ஓட்டைப் போட்டு காற்றை வெளியேற்றினோம். சில இடங்களில் பேப்பர் பலூனில் ஒட்டிக் கொண்டு எடுக்கும் பொழுது கிழிந்தது. பசையில் இன்னும் தண்ணீர் உபயோகப்படுத்தி இருக்க வேண்டும். காற்று வெளியேறிய பின், முழு பலூனையும் எடுத்தப்பின் காகிதம் பலூன் வடிவத்தில் இருந்தது. அதனை எங்கள் நைட் லாம்ப்பின் மேல் வைத்தவுடன், தீஷுவின் கமெண்ட்.."சூப்பர்.. ".




உலக உருண்டை போல் மிகவும் அழகாக இருக்கிறது.



அடுத்த ஆக்டிவிட்டிக்கு, உல்லன் நூலை சிறிது சிறிதாக வெட்டி வைத்துக் கொண்டோம். சென்ற ஆக்டிவிட்டியில் காகிதம் பலூனில் ஒட்டியதால், ஒரு பாலித்தீன் கவர் கொண்டு பலூனை சுற்றி விட்டோம். இந்த முறை பசையில் தண்ணீர் கலக்கவில்லை. வெட்டிய நூலை பசையில் நனைத்து, பலூனின் அடி பாகத்தில் ஒட்டினோம். பறவையின் கூடு வடிவத்தில் வருவதற்காக அடி பாகம் மட்டும் ஒட்டினோம்.

காய்ந்தவுடன் பலூனிலிருந்து நன்றாக எடுக்க வந்தது. எங்களிடம் பெவிகால் போன்ற பசை இல்லை. எங்களிடம் இருந்த பசையால் உல்லனை சரியாக ஒட்ட முடியவில்லை. அங்கு அங்கு நூல் பிரிந்து வருகிறது.



ஈஸ்டர் முடிந்தவுடன், பிளாஸ்டிக் முட்டைகள் மிகவும் மலிவாக கிடைத்தன. ஏதாவது செய்யலாம் என்று வாங்கி வைத்திருந்தோம். அதில் ஒன்றை எடுத்து எங்கள் கூடில் வைத்து, வரவேற்பறையில் வைத்திருக்கிறோம். அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது.

Monday, May 16, 2011

Carryover Addition

இது என் முந்நூறாவது பதிவு. என் முதல் நன்றி தீஷுவிற்கு. நான் விட்டாலும் விடாமல் ஆக்டிவிட்டி என்று என்னை துளைத்து எடுப்பதற்கும், என் மாடலாக செயல்படுவதற்கும். என் அடுத்த நன்றி என் கணவருக்கு. வீட்டில் அவர் பொருட்களுக்காக ஒரு ஒரே அலமாரி. மற்ற அனைத்து இடத்தையும் நாங்கள் செய்த பொருட்கள், செய்வதற்காக வாங்கி வைத்திருக்கிற பொருட்கள் என்று அடைத்து வைத்திருந்தாலும் எங்களை உற்சாகப்படுத்துவதற்கு. மூன்றாவது நன்றி உங்களுக்கு. வெரைட்டியாக இல்லாமல் ஒரே மாதிரி இடுகைகளாக இருக்கும் ஒரு ப்ளாகை படிப்பது அவ்வளவு எளிதல்ல. இருந்தாலும் சிலர் தொடர்ந்து படிப்பது உற்சாகம் ஊட்டுகிறது. நன்றி அனைவருக்கும்.

தீஷு இரண்டு இலக்க எண்கள் கூட்டும் பொழுது, முதலில் ஒன்ஸ் கூட்டு, அடுத்து டென்ஸ் கூட்டு என்றால், மாற்றி கூட்டினாலும் அதே விடை தானே வருகிறது என்று கேட்பாள். நீ Carry over addition செய்யும் பொழுது விடை வேறு மாதிரி வரும் என்றவுடன், எனக்கு சொல்லிக் கொடு என்றாள். சரி என்று ஆரம்பித்தோம். முதலில் 2+2+1, 1+2+2+3 என்று இரண்டு எண்களுக்கு மேல் கூட்டுவதற்கு சொல்லிக் கொடுத்தேன்.

எனக்கு நினைவு தெரிந்த வரை, ஒன்ஸில் இடம் இல்லை என்பதால் டென்ஸுற்கு எடுத்துக் கொண்டு போகிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு நாளும் ஏன், எப்படி அடுத்த இலக்கத்திற்கு போகிறது என்று யோசித்தது இல்லை. இத்தனைக்கும் நான் கணிதத்தில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பேன். அதனால் தீஷு சரியாக செய்தால் மட்டும் போதாது, புரிந்து செய்ய வேண்டும் என்று கவனமாக இருந்தேன்.




இந்த விளையாட்டு தீஷுவிற்கு நன்றாக நினைவிலிருந்தது எங்களுக்கு வசதியாக போய்விட்டது. மேலும் வெவ்வேறு விளையாட்டுகள் மூலம் ஒன்ஸ் டென்ஸ் கண்டுபிடிக்க வைத்து அவளுக்கு தெளிவாக புரிய வைத்தேன்.

அனைத்து விளையாட்டுகளும் பாசி வைத்து சொல்லிக் கொடுத்தால், இப்பொழுதும் பாசி வைத்தே சொல்லிக் கொடுத்தேன். ஒரு தாளை மூன்றாக பிரித்துக் கொண்டேன். ஒன்ஸ், டென்ஸ், ஹன்ரெட்ஸ் என்று எழுதிக்கொண்டேன். ஒன்ஸில் 10 கட்டங்கள். டென்ஸில் 10 கோடுகள், ஹன்ரெட் ஒரு சதுரம். முதல் எண்னை பாசியில் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது எண்ணை பாசி மதிப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு எண்களையும் கூட்டுவதற்கு, முதலில் தனித்தனியாக இருக்கும் பாசிகளை ஒன்ஸ் கட்டத்தில் வைத்துக் கொண்டு வர வேண்டும். பத்து பாசி வைத்து முடித்தப்பின் டென்ஸுக்கு மாற்றி, ஒன்ஸை காலியாகிவிட வேண்டும். எதற்காக அடுத்த இலக்கத்திற்கு கொண்டு செல்கிறோம் என்று புரிந்து கொள்ள இது உதவியது. சரியாக செய்கிறாள். புரிந்து கொண்டு செய்கிறாளா என்று தெரியவில்லை.

Wednesday, May 11, 2011

Chapter books

குழந்தைகளின் கேட்கும் திறன் அவர்களின் வாசிக்கும் திறனைக் காட்டிலும் அதிகம். நான்கு வயது குழந்தைக்கு, இரண்டாவது வகுப்பு படிக்கும் குழந்தை வாசிக்கும் புத்தகத்தை, நாம் வாசித்துக் காட்டினால் கேட்டு புரிந்து கொள்ள முடியும். மேலும் விவரங்களுக்கு : http://www.daddyread.com/readingChapter.html. இப்பொழுது தீஷுவிற்கு சாப்டர் புத்தகங்கள் மேல் ஆர்வம் வந்திருக்கிறது. சாப்டர் புக்ஸ் என்பது ஒரு பெரிய கதை, பல பகுதிகளாக (chapters) பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுயிருக்கும்.

daddyread.com லில் நல்ல சாப்டர் புக்ஸ் லிஸ்ட் உள்ளது. எனக்கும் தீஷுவிற்கும் விருப்பமான மூன்று சாப்டர் புக்ஸ் பற்றி இங்கு குறிப்பிட்டு உள்ளேன்.

Frog and Toad (Series):



நான் முதல் Frog and Toad புத்தகம், Blossom புக் ஸ்டோரில் வாங்கினேன். அப்பொழுது தீஷுவிற்கு விருப்பமிருக்கவில்லை. ஆனால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தியாவிலிருந்து கிளம்பும் பொழுது, அங்கிருந்து வெகு சில புத்தகங்களே எடுத்து வந்தோம். மிகுந்த யோசனைக்குப் பிறகு நான் அதை எடுத்து வந்தேன். முதலில் ஹோட்டலில் சில நாட்கள் தங்கி இருந்தோம். அப்பொழுது ஏதாவது புத்தகம் வாசித்துக் காட்டு என்று அவள் கேட்டவுடன், என் கைக்கு அகப்பட்டது இந்த புத்தகம். தீஷுவிற்கு மிகவும் பிடித்துவிட்டது. திரும்ப திரும்ப வாசிக்கச்சொல்லி கேட்டுக் கொண்டியிருந்தாள். சில கதைகள் வரிக்கு வரி மனப்பாடம் ஆகிவிட்டன. ஒவ்வொரு சாப்டரும் ஒரு கதை. எங்களுக்கு மிகவும் பிடித்து விட்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் லைப்ரேரியிலிருந்து வெவ்வேறு புத்தகங்கள் எடுத்து வந்து வாசிக்கிறோம். சான்ஸ் கிடைத்தால் கண்டிப்பாக வாசித்துக் காட்டுங்கள்.




Three Stories you can read to your cat/dog/ Bear (Series):

கதை நாய்க்கு சொல்லுவது போல் அமைந்து உள்ளது. அதைப் போல் பூனை மற்றும் கரடிக்கு என தனித்தனி புத்தகங்கள் உள்ளன. ஒவ்வொரு புத்தகத்திலும் 3 கதைகள். Three more stories you can read என்றும் புத்தகங்கள் உள்ளன. மிகவும் ரசிக்கத்தக்க கதைகள். எங்கள் இருவருக்கும் மிகவும் விருப்பம்.

Magic Tree House :



ஒரு மாஜிக் மர வீடு ஜாக்கையும், ஆனியையும் அவர்கள் விரும்பும் காலத்திற்கு கூட்டு செல்கிறது. அவர்களுக்கு அங்கு என்னவெல்லாம் நடந்தது என்பது த்ரிலர், சில உண்மைகள் என செல்கிறது கதை. ஒரு புத்தகம் ஒரு கதை. ஒவ்வொரு புத்தகமும் 40 பக்கங்கள் முதல் 90 பக்கங்கள் வரை உள்ளன. நான் கிட்டத்தட்ட 45 புத்தகங்கள் வரை பார்த்தேன். அதற்கு மேலும் இருக்கலாம். குழந்தைகள் விரும்பி இக்கதைகள் கேட்க கூடும். எங்களுக்குப் பிடித்துயிருக்கிறது. நாங்கள் இரண்டு புத்தகங்கள் படித்து இருக்கிறோம்.

Saturday, May 7, 2011

பிறந்த நாள் வாழ்த்துகள்




அன்பின் தீஷு,

ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் நான், உன்னிடம், "ஓ.. உனக்கு அதுக்குள்ள இவ்வளவு வயசாயிடுச்சா.. இப்போ தான் பிறந்த மாதிரி இருக்கு" என்று கேட்பதே வாடிக்கையாகி விட்டது. இந்த முறை அவ்வாறு கேட்க போவதில்லை. நீ வளர்ந்து கொண்டு இருக்கிறாய். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும்.

இப்பொழுது ஐந்து வயது சிறுமி நீ. முழுவதுமாக மழலை மாறி ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது. அடுத்தவர்களை வாங்க, போங்க என்று மரியாதை கொடுத்து பேசவும் கற்றுக் கொண்டு விட்டாய். பேச்சில் தெளிவு. அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கூடியிருக்கிறது. கூச்சம் குறைந்திருக்கிறது. புதியவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்கிறாய். அனைத்து குழந்தைகளிடமும் சிநேகமாக விளையாடுகிறாய். ஆறு மாத குழந்தையுடன் கூட உன்னால் நேரம் செலவிட முடிகிறது. எந்த நேரமும் ஏதாவது கேட்டுக் கொண்டே இருக்கிறாய். அன்று ஒரு நாள் உன்னிடம் என் மனக்குறையை சொன்னவுடன், என் கை பற்றி, எல்லா சரியா போகும் என்றாய். என் தோழியை உன்னிடம் பார்த்தேன். என் அழுகையை மறைக்க வேண்டி என்னால் என் பதிலை தலை ஆட்டலில் மட்டுமே சொல்ல முடிந்தது.

ஆனால் உன்னிடம் இருக்கும் மிகப்பெரிய குறை - உனக்கு எல்லாவற்றுக்கும் ஒருவர் வேண்டும். சுதந்திரமாக செய்வதற்கு உனக்கு பயம். அப்பா, உன்னிடம் நீயா பண்ணு என்றால் அடுத்த நிமிடம் என்னிடம் உதவிக்கு வருவாய்.. நான் முடியாது என்றால் அப்பாவிடம் போவாய். பார்க்கில் அனைத்து குழந்தைகளும் தனியாக விளையாடும் சின்ன சறுக்கல் போன்றவற்றுக்குக் கூட நாங்கள் அதன் அருகே உனக்காக காத்துக் கொண்டு நின்று கொண்டிருக்க வேண்டும். நீ ஹாலில் ஏதோ செய்து கொண்டிருக்கிறாய் என்று ரூமிற்கு சென்றால், அடுத்த விநாடி என் அருகில் நிற்பாய். இன்னும் சில வருடங்களில் உன்னை என்னருக்கில் அழைத்தால் கூட நீ வருவாயா என்று தெரியாது.. இப்பொழுது இருந்துவிட்டு போகட்டும் என்று உன் அப்பாவிடம் சொல்லுவது உண்டு. ஆனால் அனைத்து குழந்தைகள் புழங்கும் இடங்களிலும் வெறும் குழந்தைகள் கூட்டத்தில் உன்னுடன் நாங்கள் மட்டும் இருப்பது எனக்கு சில நேரங்களில் யோசிக்க வைக்கிறது. ஆனால் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக நீ மாறி கொண்டிருப்பது எனக்கு நம்பிக்கை அளிக்கிறது.

உன்னிடம் செலவிடும் ஒவ்வொரு நொடியையும் என் மனதில் பத்திரப்படுத்துகிறேன். இப்பொழுதும் அமைதியாக நீ தூங்கிக் கொண்டிருந்தால் என்னால் உன்னை முத்தமிடாமல் அந்த இடத்தை கடக்க முடியாது. என் வாழ்வாகிய உன்னை, நீ என்றும் இதே குறும்புத்தனத்துடன், சந்தோஷத்துடன் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். Happy
Birthday to you Dheekshu!!!!!

Wednesday, May 4, 2011

Strokes of colours

இந்த முறை நாங்கள் வந்த விமானம் லேட் ஆனதால், அடுத்து பிடிக்க வேண்டியிருந்த விமானத்தைப் பிடிக்க முடியாமல் ஆனது. அடுத்த விமானம் அடுத்த நாள் என்பதால் ஹோட்டலில் தங்கி இருந்தோம். எங்கள் விமானத்தில் வந்திருந்த ஒரு பெண் தனியாக வந்திருந்ததால், எங்களுடன் சேர்ந்து கொண்டார். எங்கள் பக்கத்து அறையில் தங்கியிருந்தார். மறுநாள் அவருக்கு எங்களுக்கு முந்திய விமானத்தில் இடம் கிடைத்ததால், எங்கள் முன்னே கிளம்பிவிட்டார். அவர் சீக்கிரமே கிளம்பிவிடுவார் என்பதை புரிந்து கொண்ட தீஷு,அவளாகவே ஒரு தாளில் எதையோ ஹோட்டல் போனா கொண்டு வரைந்து கொடுத்தாள். அவருக்கு மிகுந்த சந்தோஷம். யாராவது பிரிகிறார்கள் என்றால் தீஷுவை பொருத்த வரை அவர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும். ஒரிரு மணி நேரம் பழகியதற்கு கிஃப்ட் கொடுக்கிறாள் என்று சந்தோஷமாக சொன்னார்கள்.




நாங்கள் இங்கு வந்த பொழுது எங்களுக்கு உதவி செய்தவர்கள் கடந்த வாரம் இந்தியா கிளம்பினார்கள். தீஷுவாகவே அவரிடம், நீங்கள் போகும் பொழுது உங்களுக்கு ஒரு பெயிண்டிங் கிஃப்ட் கொடுக்க போகிறேன் என்று கூறிவிட்டு, தினமும் என்னிடம் என்ன செய்யலாம் என்று கேட்டுக் கொண்டிருந்தாள். மார்பிள் பெயிண்டிங் செய்யலாம் என்று தோன்றியது. ஆனால் எங்களிடம் கோழிகுண்டு இல்லை. ஆகையால் கற்கள் எடுத்து வந்தோம். ஆனால் கற்கள் உருண்டையாக இல்லாததால், நன்றாக உருளவில்லை. அதனால் ஒரு ஜாரில் காகிதத்தை வைத்து, கற்களை பெயிண்ட்டில் உருட்டி, ஜாரில் போட்டு, ஜாரை மூடி, குலுக்கினோம். ஜார் மூடியிருந்ததால் அவளால் நன்றாக குலுக்க முடிந்தது. கற்களும் உருண்டு நல்லதொரு பெயிண்டிங் செய்திருந்தன.





Crayons மெழுகு என்பதால் ஏதாவது சூடான பொருள் மேல் காகிதத்தை வைந்து வரைந்தால், மெழுகு உருகி, நல்ல கலர் கிடைக்கும் என்று படித்திருக்கிறேன். ஆனால் தீஷு சூடான பொருளை லேசாக தொட்டு விட்டால் அடுத்த முறை crayons கூட தொட மாட்டாள் என்று தெரிந்து இருந்ததால், முயற்சி செய்யாமல் இருந்தேன். வரைந்து சூடான பொருளை தொடும் சாத்தியத்தை தடுக்கும் பொருட்டு Crayons சீவி கொண்டோம். கற்கள் எடுத்து வந்து, அவற்றை தோசை கல்லில் சூடாக்கிக் கொண்டோம். தோசை கல்லிருந்து எடுத்தவுடன், சூடான கற்களின் மேல் crayons துருவலை தூவினோம். crayons உருகி ஓடி, பல கலர்கள் கலந்து, கற்களை அழகாக கலர் செய்தன. மிகவும் அழகாக இருக்கிறது. அந்த கற்கள் ஒரு கண்ணாடி கிண்ணத்தில், ஹாலை அலங்கரித்து கொண்டிருக்கிறன.

Tuesday, May 3, 2011

மஞ்ச பொண்ணு

நேற்று இரவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென்று தீஷு, ஏதாவது கதை சொல்லுங்கள் என்றாள். நான் உடனே, விடுகதை கேளுங்கள் என்று என் கணவரிடம் சொன்னேன். தீஷுக்கு புரியும் அளவுக்கு நாங்களாக தயாரித்து மாறி மாறி கேட்டோம். அவற்றில் சில,

1. This person is yellow in colour. If you remove his skin, he becomes white. - Banana

2. If you put this boy inside the sand, after few days his legs and hands come out the sand. Who is he? - Seed

3. I am cirlce in shape. I reduce my size everyday and vanish one day. And start to grow from the next day into full circle.

இவ்வாறு பத்து வரை கேட்டுயிருப்போம். அவளுக்கு அனைத்திற்கும் க்ளூ கொடுத்து கண்டுபிடிக்க வைத்தோம். சாப்பிட்டு முடித்தவுடன் தீஷு சொன்னாள். இப்ப என் turn. அவள் கேட்ட விடுகதை.

இந்த பெண் நல்ல மஞ்சளாக இருப்பாள். பல் வெள்ளையாக இருக்கும். அவள் யார்? நாங்களும் மாம்பழம் என்று பல மஞ்சள் பொருட்களை சொல்லிப் பார்த்தோம். அவள் விடை : பழைய பள்ளியில் படித்த ஜூஹி. எங்கள் விடுகதையில் பையன், மனிதன் என்று உபயோகித்ததால், அவள் நிஜமாகவே ஒரு பெண்ணை கண்டுபிடிக்க சொல்லி இருக்கிறாள்.

நாங்கள் எங்களுக்குத் தெரிந்த பொருள்களாகத் தான் விடுகதையில் இருக்க வேண்டும் என்றவுடன், அவள் கேட்டது, "இது ஷார்பாக இருக்கும்.. ஆனால் காய் வெட்ட முடியாது.. கையில் குத்தும்.. என் டால் ஹவுஸில் இருக்கு..". அப்பாவின் பதில், "மிக்ஸி பிளேடு".. எனக்கு அவள் உலகத்திலிருந்து தான் கேட்டியிருக்க வேண்டும் என்று புரிந்திருந்தது. என் சரியான பதில், "விளையாட்டுக் குக்கர்". அது ஒரு நாள் அவள் கையில் குத்திவிட்டது.

அவள் அந்த பக்கம் போனப்பின் அப்பா மெதுவான குரலில் என்னிடம் கேட்டார், " எல்லா அஞ்சு வயது பசங்களும் இப்படித்தானா.. இல்ல இவ மட்டும் தான் ஸ்லோ பிக்கெப்பா"..

Sunday, May 1, 2011

பொம்மைக்கு ஷால்

என் அம்மாவின் அம்மாவிடமிருந்து நான் சிறுமியாக இருந்த பொழுது நிறைய விஷயங்கள் கற்றுயிருக்கிறேன். ஒரிகமி ( கப்பல், சட்டை, பெட்டி, கப் போன்றன), பல்லாங்குழி, காலால் பூ கட்டுவது, நூல் வேலைகள், வரைந்தல், ஸ்வெட்டர், கூடை பின்னுதல் போன்றன. அந்த அடிப்படைகள் பின் நாட்களில் எனக்குப் பல விதத்தில் உதவின. ஒவ்வொரு விடுமுறையின் போதும் நானாகவே எதையாவது தேடி தேடி பழகிக் கொள்வேன். என் அம்மாவுக்கு இதிலெல்லாம் விருப்பம் இல்லையென்பதால், என் பாட்டியிடம் நான் பழகியதை என் மகளுக்கு நான் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பின்னாளில் அவளுக்கு விருப்பமிருந்தால் அவள் தொடர்ந்து கொள்ளலாம. பல்லாங்குழி வாங்கி வந்திருக்கிறோம். அதில் அனைத்து விளையாட்டுகளும் நினைவில் இல்லை. என் சித்தியிடம் எனக்கு நினைவூட்ட சொல்லி இருக்கிறேன். அவர் சொன்னவுடன் தீஷுவிற்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.





இப்பொழுது என்ன சொல்லிக் கொடுக்கலாம் என்று யோசித்தவுடன், என் நினைவில் வந்தது கையால் woolen பின்னுதல். ஊசியின் மூலம் பின்னுதல் தீஷுவின் வயதிற்கு அதிகமாக இருக்கும் என்று தோன்றியது. கையினால் பின்னுவது மிகவும் எளிமையானது. தீஷுவிற்கு நான்கு ஐந்து தடவை சொல்லிக் கொடுக்க வேண்டியிருந்தது. மிகவும் விருப்பமாக செய்யவில்லை. ஆனால் அவள் பொம்மைக்கு ஒரு ஷால் செய்திருக்கிறாள்.

செய்முறை இந்த லிங்கில் உள்ளது.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost