தீஷு இந்தியாவில் கொண்டாடும் முதல் சுதந்திர தினம். காலையில் எழுந்தவுடனே தீஷுவும் அவள் அப்பாவும் அப்பார்ட்மென்ட் கொடி ஏற்றத்திற்குச் சென்று விட்டனர். கொடி ஏற்றத்திற்குப் பின், அனைவரும் "பாரத் மாத்தாக்கி ஜே" என்று கூறிக்கொண்டே சுற்றி வந்தனர். கொடியையும் மிட்டாயையும் வாங்கிக்கொண்டு தீஷு வந்து விட்டாள். வீட்டிற்கு வந்தவுடன் தீஷுவும் அவள் அப்பாவும் சேர்ந்து ஒரு தேசிய கொடி செய்தனர்.
ஒரு துணியை சதுரமாக வெட்டிக் கொண்டு, அவள் அப்பா மூன்று பாகமாக பிரித்துக் கொடுத்தார். மேல் பாகத்தில் ஆரெஞ்சும் கீழ் பாகத்தில் பச்சையும் கலர் அடித்தாள் தீஷு. முடித்தவுடன் நடுவில் ஒரு ரூபாய் கொண்டு சக்கரம் வரைந்து கொண்டாள். பின்பு அதில் 24 கோடுகள் வரைந்தனர். பின்பு அப்பா ஒரு கம்பில் கொடியை ஒட்டிக் கொடுத்தார். தீஷு கொடி எடுத்துக் கொண்டு "வந்தே மாதரம்" "வந்தே மாதரம்" என்று கத்திக் கொண்டுயிருந்தாள்.
கொடி அதன் வண்ணங்கள் பற்றிய நல்லதொரு அறிமுகமாக இருந்தது. அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
Subscribe to:
Post Comments (Atom)
kudos dheekshu!! :-)
ReplyDelete/*கொடி அதன் வண்ணங்கள் பற்றிய நல்லதொரு அறிமுகமாக இருந்தது. */
ReplyDeleteநல்ல முயற்சி. வாழ்த்துக்கள்