Thursday, September 23, 2010

கலர் கோலப்பொடி



நான் பொம்மைக்கடைக்குச் செல்ல நேர்ந்தால், ஏதாவது விளையாட்டின் ஐடியாவை தீஷுவின் வயதிற்கு ஏற்ப மாற்றி வீட்டிலேயே செய்ய முடியுமா என்று பார்ப்பது என் வழக்கம். வண்ண மணல்களை கண்ணாடி பாட்டிலில் போடும் ஒரு செயல்முறை விளையாட்டைப் பார்த்தவுடன் இதை வீட்டில் செய்யலாம் என்று நினைத்து ஐந்து ஆறு மாதங்கள் ஆகி விட்டன. தீஷுவிற்கு மணல் அலர்ஜி என்று தெரிந்தவுடன், உப்பு அல்லது கோலப்பொடி கொண்டு செய்யலாம் என்று நினைத்திருந்தேன். கலர் கோலப்பொடி வீட்டில் இருந்தது.அதைக் கொண்டு செய்தோம்.

ஒரு காலி பாட்டில் எடுத்து, அவற்றில் ஒவ்வொரு கலராக கலர் கோலப்பொடி போட வேண்டும். தீஷு விருப்பமாக செய்தாள். அடுத்த முறை செய்தால் கண்ணாடி பாட்டிலில் தான் செய்ய வேண்டும். இன்னும் கலர் நன்றாக வெளியே தெரியும். பாட்டில் ஏதாவது வித்தியாசமான வடிவத்திலிருந்தால் அழகாக இருக்கும்.

No comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost