Monday, October 6, 2008

எங்கள் கொலு

அட்டைப் பெட்டிகளைக் கொண்டு ஐந்து படிகள் கட்டி ( தேத்தி), கொலு வைத்துள்ளோம். தீஷுவிற்கு விவரம் தெரிந்து இது தான் முதல் கொலு. பொம்மைகளை எடுத்து விடுவாளோ என்று பயந்தோம். ஆனால் எடுக்கவில்லை. கொலுவில் ஒரு பொம்மை Dinning table உள்ளது. அதில் தான் உட்கார வேண்டும் என்றாள். அது பொம்மைக்கு என்றவுடன், அவளுடைய இரண்டு பொம்மைகளைக் கொண்டு வந்து Chairயில் உட்கார வைத்து விட்டாள். தினமும் காலையில் எழுந்தவுடன், கொலு முடிஞ்சிடுச்சி என்பாள் அவள் பொம்மையை எடுப்பதற்காக.

8 comments:

  1. \\தினமும் காலையில் எழுந்தவுடன், கொலு முடிஞ்சிடுச்சி என்பாள் அவள் பொம்மையை எடுப்பதற்காக.//

    ஓ அழகு அழகு :)

    ReplyDelete
  2. முதல் வருகைக்கு நன்றி முத்துலெட்சுமி..

    ReplyDelete
  3. // அதில் தான் உட்கார வேண்டும் என்றாள். அது பொம்மைக்கு என்றவுடன், அவளுடைய இரண்டு பொம்மைகளைக் கொண்டு வந்து Chairயில் உட்கார வைத்து விட்டாள்.//

    :-))

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி கார்த்திக்.

    நன்றி சந்தனமுல்லை.

    ReplyDelete
  5. தினமும் காலையில் எழுந்தவுடன், கொலு முடிஞ்சிடுச்சி என்பாள் அவள் பொம்மையை எடுப்பதற்காக.
    //

    அறிவு :))

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி அப்துல்லா. கொலு இருக்கும் பொழுது தினமும் பொம்மை வேண்டும் என்பாள். கொலு முடிந்தவுடன், கொலு முடிஞ்சிடிச்சி.. பொம்மையை எடுத்துக்கோனா "நீங்கள் எடுத்து வைங்கமா.."

    வருகைக்கு நன்றி amirdhavarshiniamma.

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost