Monday, November 9, 2009

பென்சில் சீவி விட்டு...

தீஷுவிற்கு ஒவ்வொரு வாரயிறுதியிலும் கலரிங்கோ அல்லது எழுதுவோ கொடுப்பர். இந்த ஞாயிறு அவள் கலர் செய்யும் பொழுது அவள் டப்பாவிலிருந்த அனைத்து கலர் பென்ஸில்களும் கூர்மையாக இல்லாததைக் கவனித்தேன். அனைத்தையும் சீவி முடித்தப்பின் நிறைய துகிள்கள் (Pencil Scrap) இருந்தன. அதை வைத்து கோலாஜ் செய்தோம். முதலில் ஒரு ஹார்ட் வரைந்து கொடுத்தேன். அதன் மேல் அவளை கம் தடவ செய்து, அதன் மேல் தூவி விட்டோம். பின் காகிதத்தைத் தட்டி அதிகமுள்ளதை எடுத்து விட்டோம். தீஷு மேலும் மேலும் பல வடிவங்கள் வரைந்து செய்து கொண்டிருந்தாள். அடுத்து துகிளை வைத்து அதன் ஓரத்திலுள்ள வண்ணத்திலிருந்து அது எந்த பென்ஸிலிலிருந்து வந்தது என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் விருப்பமாகச் செய்தாள். மொத்தத்தில் அரைமணி நேரம் சேர்ந்து பொழுதைக்கழிக்க இந்தத் துகிள்கள் உதவின.




தீஷு இன்று Sharper உபயோகிக்கக் கற்றுக் கொண்டுவிட்டாள். சீவி முடித்தவுடன், அதை எடுத்துக் கொண்டு, இதே மாதிரி ஒட்ட வேண்டும் என்று நாங்கள் அன்று எவ்வாறு ஆரம்பித்தோமோ அதே வரிசையில் செய்ய ஆரம்பித்து விட்டாள்.

2 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost