Tuesday, May 18, 2010

ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு

நாங்கள் இன்னும் இருக்கிறோம். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக பதிவுகள் எழுதவில்லை. ரீடரிலிருந்த பதிவுகள் சிலவற்றை சென்ற வாரயிறுதியில் படித்தேன். படிக்காதது இன்னும் மூன்று இலக்க எண்ணில் இருக்கிறது. எப்பொழுது படித்து முடிப்பேன் என்று தெரியவில்லை. எழுதாதற்கு நேரமில்லை என்று இல்லை.

தீஷுவிற்கு இப்பொழுது கோடை விடுமுறை. நான் வேலைக்குச் சென்றபின் முதல் கோடை விடுமுறை. என் அம்மாவின் உதவியினால் கழிகிறது. இப்பொழுது நாங்கள் இருக்கும் பகுதியில் குட்டீஸ் அதிகம். ஆகையால் தீஷு பிஸி. தினமும் மாலையில் வந்தவுடன் வீடு வீடாக போய் அவளை தேட வேண்டியிருக்கிறது. கூப்பிட்டாலும் வருவதில்லை. வந்தாலும் கவனம் முழுவதும் விளையாட்டில் இருக்கிறது. ஆகையினால் என்னுடைய ஆக்டிவிட்டீஸ் குறைத்துக் கொண்டேன்.

சில நேரங்களில் வாசிப்பதற்கு விருப்பம் காட்டுகிறாள். சில நேரங்களில் விருப்பமிருப்பதில்லை. That is fine with me.. வாசிக்க பழகுவதில் தான் எங்கள் கூட்டு நேரம் கழிகிறது.

இனி தொடர்ந்து எழுதுவது என்று முடிவு செய்து இருக்கிறேன். பார்க்கலாம் :-)).

3 comments:

  1. welcome back Dheekshu & Dhiyana!

    Nice to know Dheekshu is game! :-) Keep updating!

    ReplyDelete
  2. வெளி விளையாட்டுக்களாக இருந்தாலும் பகிர்ந்து கொள்ளலாமே?.. இனி அடிக்கடி எழுதுங்கள்!

    ReplyDelete
  3. நன்றி முல்லை..

    நிச்சியமாக பகிர்ந்து கொள்கிறேன் தமிழ் பிரியன்..

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost