Tuesday, January 19, 2010

சோழிகளுடன் விளையாடு

தீஷுவிற்கு சோழிகள் மீது ஆர்வம் அதிகமாக இருக்கிறது. இதை வைத்து சில ஆக்டிவிட்டீஸ் செய்தோம்.



சோழிகளை கோட்டின் மேல் வைத்தல். இது கண் கை ஒருங்கினைப்புக்கு ஏற்றது.






இரு அளவில் சோழிகளை ஒரு சிறு பையில் எடுத்துக் கொண்டு, நான் கேட்கும் அளவை கண்களை மூடிக் கொண்டு எடுத்து தர வேண்டும். இது தொடுதல் உணர்ச்சியை மேம்படுத்தும்.




சோழியை தரையில் குவியலாகக் கொட்டி, அதை கையில் அள்ளுதல். இது கை விரல்களையும் கையையும் வலுப்படுத்தும்.





சோழிகளை இரு அளவில் பிரித்து கூட்டல் செய்தல். முதல் எண் அளவு பெரிய சோழிகள் எடுக்க வேண்டும். இரண்டாவது எண்ணிற்கு சிறு சோழிகள். பின்பு இரண்டையும் இணைத்து கூட்ட வேண்டும். தீஷுவிற்கு கணக்கையும் எழுதி விடையையும் எழுத வேண்டும்.

2 comments:

  1. நல்ல முயற்சி பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. வாவ்!! கலக்கறீங்க..நீங்களும் தீஷுவும்!
    கூட்டலெல்லாம் கத்துக்கொடுத்து! :-)

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost