Showing posts with label க‌தை. Show all posts
Showing posts with label க‌தை. Show all posts

Thursday, May 16, 2013

சின்ன‌ச் செடி..பெத்த‌ ம‌ர‌ம்..

சென்ற‌ வ‌ருட‌ அன்னைய‌ர் தின‌த்திற்கு தீஷு ப‌ள்ளியிலிருந்து ஒரு சின்ன‌ச்  செடி கொண்டு வ‌ந்தாள். அது வ‌ள‌ர்ந்து சூரிய‌காந்தி பூக்க‌ள் வ‌ந்த‌ன. பூக்க‌ள் காய்ந்த‌ப்பின் விதைக‌ளை எடுத்தோம். ஒரு பூவில் 65 விதைக‌ள் இருந்த‌து ஆச்ச‌ரிய‌மாய் இருந்த‌து. தீஷு ப‌ள்ளிக்கு விதைக‌ளை எடுத்துச் சென்று வ‌குப்பிலுள்ள‌ குழ‌ந்தைக‌ளுக்குக் கொடுத்து வ‌ந்தாள்.




இப்பொழுது அந்த‌ச் செடியிருந்த‌ தொட்டியில் ஒரு செடித் தானாக‌ வ‌ள‌ர்கிற‌து. சூரிய‌காந்தி செடி தான். தீஷுவிட‌ம் என்ன‌ செடி என்று கேட்ட‌வுட‌ன், Sunflower plant என்று சொல்லிவிட்டு,

What if, இது ஒரு பெரிய‌ ம‌ர‌மாச்சுனா? என்றாள்‌

என்னாகும்? என்றேன்

நான் தூங்கி எந்திரிக்கிற‌ப்ப‌, என் பெட் மேலே நூல் நூலா இருக்கும்.. என்ன‌டானு பார்த்தா அது அந்த‌ ம‌ர‌த்தின் வேர்.. வேரே ம‌ண்ணுக்கு மேல‌ வ‌ர்ற மாதிரி அது ஒரு பெரிய‌ ம‌ர‌ம். நான் Brush ப‌ண்ண‌ பாத்ரூம் போனா, அங்க‌ டாப்ப‌யே வேர் மூடிறிச்சு..கிட்ச‌ன்ல‌ வேர்.. வீடே தெரிய‌ல‌..

அப்புற‌ம்.. பெரிய‌ ம‌ர‌மாயிருந்தா Birds எல்லாம் இருக்குமே?

ஆம்.. நிறைய இருந்திச்சு.. நான் அவ‌ங்க‌ கிட்ட‌ ஹெல்ப் கேட்டேன்..அந்த‌ வேர் எல்லாம் எடுக்க‌ ஆர‌ம்பித்தோம்..ஆனா வேரெல்லாம் எடுக்க‌ முடிய‌ல‌.. ப‌க்க‌த்துல‌ இருக்கிற‌வ‌ங்க‌ கிட்ட‌ ஐடியா கேட்டேன்.. எல்லாரும் அவ‌ங்க‌ ஐடியாவை ஒரு பேப்ப‌ரில் எழுதித் த‌ந்தாங்க‌. அதுல பெஸ்ட் ஐடியா குழி தோண்டி வேர‌ எடுக்கிற‌து. நாங்க‌ எல்லாரும் சேர்ந்து குழியைத் தோண்டி, வேர்க‌ளை எடுத்து, வீட Save‌ பண்ணிட்டோம்.

அந்த‌ ம‌ர‌த்த‌ என்ன‌ பண்ணினீங்க‌?

 அத‌ எடுத்திட்டுப் போய் பார்க்ல‌ திரும்ப‌ Plant ப‌ண்ணிட்டோம்..கிட்ஸ் ஏறி விளையாட‌ வ‌சதியா இருக்குமே என்றாள்..

அவ‌ளேப் பார்த்துக் கொண்டே இருந்தேன். இதே வ‌ய‌சிலேயே இப்ப‌டியே இருந்துவிடேன் க‌ண்ண‌ம்மா அல்ல‌து இதே கற்ப‌னைத் திற‌னோடு வ‌ள‌ரு என்று நினைத்துக் கொண்டே, ந‌ல்ல‌ ஸ்டோரிடா..குட்.. என்றேன்.


ப‌டங்க‌ள் : எங்க‌ள் வீட்டில் வ‌ள‌ர்ந்த‌ பூக்க‌ள். தீஷு எடுத்த‌து.


Thursday, April 25, 2013

சனி ஞாயிறு விடுமுறை விடும் பழக்கம் ஏன் ஏற்பட்டது ‍?

கி.ராஜ‌ நாராய‌ண‌ன் எழுதிய‌ "தாத்தா சொன்ன கதைகள்" சென்ற‌ முறை புத்த‌க‌க் க‌ண்காட்சியில் வாங்கினோம். சிறு க‌தைக‌ளின் தொகுப்பு. அதிலுள்ள‌ அனைத்துக் க‌தைக‌ளையும் சிறுவ‌ர்க‌ளுக்குக் கூற‌முடியாது என்ப‌து என் எண்ண‌ம். அதிலிருந்து ஒரு க‌தை. ப‌டித்து ரொம்ப‌ நாளாகி விட்ட‌தால் க‌தையின் பெய‌ர் நினைவில் இல்லை. அது ஒரு சோகக் க‌தை. ஆனால் என் ம‌க‌ளுக்குச் சொல்லுவ‌த‌ற்காக‌ ம‌கிழ்ச்சியான‌ க‌தையாக‌ மாற்றியுள்ளேன்.

 ஒரு ஊரில் ஒரு எறும்பு இருந்த‌து. ஒரு நாள் ம‌கிழ்ச்சியாக‌ ஆற்றுக்கு த‌ண்ணீர் குடிக்கச் சென்ற‌து. ஏன் ம‌கிழ்ச்சியாக‌ இருக்க‌ என்று ஆறு கேட்ட‌த‌ற்கு, வெகு நாட்க‌ளுக்குப் பிற‌கு என் ந‌ண்ப‌னை இன்று பார்த்தேன் அத‌னால் ம‌கிழ்ச்சியாக‌ இருக்கேன் என்ற‌து. எறும்பின் மகிழ்ச்சி ஆற்றுக்கும் தொற்றிக் கொண்ட‌து.

ஆற்றின் அக்க‌ரையில் இருந்த‌ ம‌ர‌ம், ஆற்றிட‌ம் ஏன் மகிழ்ச்சியாக‌ இருக்க‌ என்று கேட்ட‌த‌ற்கு, அக்க‌ரையிலுள்ள‌ எறும்பு வெகு நாட்க‌ள் க‌ழித்து இன்று த‌ன் ந‌ண்ப‌னைப் பார்த்து விட்ட‌து, எறும்பு ம‌கிழ்ச்சியாய் இருந்த‌து. அத‌னால் நான் ம‌கிழ்ச்சியாய் உள்ளேன் என்ற‌து. ஆற்றின் ம‌கிழ்ச்சி ம‌ர‌த்திட‌ம் தொற்றிக் கொண்ட‌து.

 ம‌ர‌த்தின் இலையை உண்ண‌ யானை ஒன்று வ‌ந்த‌து. யானை ம‌ர‌த்திட‌ம் ம‌கிழ்ச்சிக்குக் கார‌ண‌ம் கேட்ட‌வுட‌ன் ம‌ர‌ம், ‍ ஆறு ம‌கிழ்ச்சியாக‌ இருந்த‌து, காரண‌ம் அக்க‌ரையிலுள்ள‌ எறும்பு ம‌கிழ்ச்சியாய் இருந்த‌து. எறும்பிட‌ம் ஆறு கேட்ட‌த‌ற்கு, எறும்பு த‌ன் ந‌ண்ப‌னை வெகு நாட்க‌ள் க‌ழித்து ச‌ந்தித்த‌தால் ம‌கிழ்ச்சியாக‌ இருப்ப‌தாக கூறிய‌து. எறும்பு ம‌கிழ்ச்சியாக‌ இருந்தால் ஆறு ம‌கிழ்ச்சியான‌து. ஆறு ம‌கிழ்ச்சியான‌தால் நான் ம‌கிழ்ச்சியானேன் என்ற‌து. மர‌த்தின் மகிழ்ச்சி யானையைத் தொற்றிக் கொண்ட‌து.

ப‌சியாறிய‌ யானை ஒரு ப‌சுவைச் ச‌ந்தித்த‌து. ப‌சு யானையிட‌ம் ஏன் மகிழ்ச்சியாக‌ இருக்க‌ என்று கேட்ட‌வுட‌ன் யானை, ம‌ர‌ம் ம‌கிழ்ச்சியாக‌ இருந்த‌து. கார‌ண‌ம் ஆறு ம‌கிழ்ச்சியாக‌ இருந்த‌து, ஆறு அக்க‌ரையிலுள்ள‌ ம‌கிழ்ச்சியாய் இருந்த‌ எறும்பிட‌ம் கேட்ட‌தற்கு, எறும்பு த‌ன் ந‌ண்ப‌னை வெகு நாட்க‌ள் க‌ழித்து ச‌ந்தித்த‌தால் ம‌கிழ்ச்சியாக‌ இருப்ப‌தாக‌க் கூறிய‌து. எறும்பு ம‌கிழ்ச்சியாக‌ இருந்தால் ஆறு ம‌கிழ்ச்சியான‌து. ஆறு ம‌கிழ்ச்சியான‌தால் ம‌ர‌ம் ம‌கிழ்ச்சியான‌து, ம‌ர‌ம் ம‌கிழ்ச்சியான‌தால் நான் ம‌கிழ்ச்சியானேன் என்ற‌து. யானையின் மகிழ்ச்சி மாட்டைத் தொற்றிக் கொண்ட‌து.

 ம‌கிழ்ச்சியாய் இருந்த‌ ப‌சு, த‌ன் வீட்டிற்கு சென்ற‌து. அத‌ன் முத‌லாளி ஒரு விச‌வாயி. அவ‌ன் ப‌சுவிட‌ம் ஏன் ம‌கிழ்ச்சியாய் இருக்க‌ என்று கேட்ட‌த‌ற்கு, யானை ம‌கிழ்ச்சியாக‌ இருந்த‌து கார‌ண‌ம் மர‌ம் ம‌கிழ்ச்சியாய் இருந்த‌து, கார‌ண‌ம் ஆறு ம‌கிழ்ச்சியாய் இருந்த‌து, கார‌ண‌ம் அக்க‌ரையிலுள்ள‌ எறும்பு த‌ன் ந‌ண்ப‌னை வெகு நாட்க‌ள் க‌ழித்து ச‌ந்தித்த‌து என்ற‌து. எறும்பு ம‌கிழ்ச்சியாக‌ இருந்தால் ஆறு ம‌கிழ்ச்சியான‌து. ஆறு ம‌கிழ்ச்சியான‌தால் ம‌ர‌ம் ம‌கிழ்ச்சியான‌து. ம‌ர‌ம் ம‌கிழ்ச்சியான‌தால் யானை ம‌கிழ்ச்சியாய் இருந்த‌து. யானை ம‌கிழ்ச்சியாய் இருந்த‌தால் நான் ம‌கிழ்ச்சியானேன் என்று ப‌சு சொன்ன‌து. ப‌சுவின் மகிழ்ச்சி விவ‌சாயியைத் தொற்றிக் கொண்ட‌து.

விவ‌சாயியிட‌மிருந்து அவ‌ர் ம‌னைவி, ம‌னைவிட‌மிருந்து ம‌க‌ன், மக‌னிடமிருந்து ப‌ள்ளி ஆசிரிய‌ர் ம‌கிழ்ச்சிய‌டைவ‌ர். ம‌கிழ்ந்த‌ ஆசிரிய‌ர், அன்று ச‌னிக்கிழ‌மையான‌தால், அன்று ம‌ற்றும் அத‌ன் ம‌று நாள் கொண்டாட்ட‌ விடுமுறை விட்டுவிடுவார். க‌தை சொல்லும் பொழுது ஒவ்வொரு முறையும் புதுக் க‌தாப‌த்திர‌ங்க‌ள் வ‌ரும் பொழுது முழுத் தொட‌ரையும் சொல்லுவேன். ஆனால் எழுதுவ‌தற்கு முடிய‌வில்லை. :)). உங்க‌ளால் ப‌டிக்க‌வும் முடியாது என்று தெரியும்.

தீஷுவிற்கு மிக‌வும் பிடித்த‌மான‌ க‌தை. பாதியிலிருந்து அவ‌ள் சொல்ல‌த் தொட‌ங்கிவிடுவாள்.

 இந்த‌ க‌தையில் எந்த‌ முறை ம‌கிழ்ச்சி என்ற வார்த்தை வ‌ருகிற‌து என்ப‌தை யாராவ‌து ச‌ரியாக எண்ணிச் சொன்னால் மிக்க‌ ம‌கிழ்ச்சி அடைவேன்..!!!!‌

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost