நாங்கள் இங்கு வந்த பொழுது எங்களுக்கு உதவி செய்தவர்கள் கடந்த வாரம் இந்தியா கிளம்பினார்கள். தீஷுவாகவே அவரிடம், நீங்கள் போகும் பொழுது உங்களுக்கு ஒரு பெயிண்டிங் கிஃப்ட் கொடுக்க போகிறேன் என்று கூறிவிட்டு, தினமும் என்னிடம் என்ன செய்யலாம் என்று கேட்டுக் கொண்டிருந்தாள். மார்பிள் பெயிண்டிங் செய்யலாம் என்று தோன்றியது. ஆனால் எங்களிடம் கோழிகுண்டு இல்லை. ஆகையால் கற்கள் எடுத்து வந்தோம். ஆனால் கற்கள் உருண்டையாக இல்லாததால், நன்றாக உருளவில்லை. அதனால் ஒரு ஜாரில் காகிதத்தை வைத்து, கற்களை பெயிண்ட்டில் உருட்டி, ஜாரில் போட்டு, ஜாரை மூடி, குலுக்கினோம். ஜார் மூடியிருந்ததால் அவளால் நன்றாக குலுக்க முடிந்தது. கற்களும் உருண்டு நல்லதொரு பெயிண்டிங் செய்திருந்தன.
Crayons மெழுகு என்பதால் ஏதாவது சூடான பொருள் மேல் காகிதத்தை வைந்து வரைந்தால், மெழுகு உருகி, நல்ல கலர் கிடைக்கும் என்று படித்திருக்கிறேன். ஆனால் தீஷு சூடான பொருளை லேசாக தொட்டு விட்டால் அடுத்த முறை crayons கூட தொட மாட்டாள் என்று தெரிந்து இருந்ததால், முயற்சி செய்யாமல் இருந்தேன். வரைந்து சூடான பொருளை தொடும் சாத்தியத்தை தடுக்கும் பொருட்டு Crayons சீவி கொண்டோம். கற்கள் எடுத்து வந்து, அவற்றை தோசை கல்லில் சூடாக்கிக் கொண்டோம். தோசை கல்லிருந்து எடுத்தவுடன், சூடான கற்களின் மேல் crayons துருவலை தூவினோம். crayons உருகி ஓடி, பல கலர்கள் கலந்து, கற்களை அழகாக கலர் செய்தன. மிகவும் அழகாக இருக்கிறது. அந்த கற்கள் ஒரு கண்ணாடி கிண்ணத்தில், ஹாலை அலங்கரித்து கொண்டிருக்கிறன.
wow wow romba nalla irukku Dhiyana...naanum try panren... :-)
ReplyDelete