Sunday, February 21, 2010

கவர்ந்த தருணங்கள் 21/02/09

1. படுத்துக் கொண்டிருக்கும் பொழுது ஃபானில் இருந்த ஜன்னல் நிழலைப் பார்த்து,

தீஷு: அம்மா, அங்கப் பாரு ஜன்னல் reflection.

அம்மா : (ரூமில் இரண்டு ஜன்னல்கள் இருந்ததால்) எந்த ஜன்னலோட reflectionனு சொல்லுப் பார்க்கலாம்?

தீஷு : (சரியாக) அந்த ஜன்னலோடது

அம்மா : (ஆச்சரியமாக) எப்படிடா கரெக்டா சொன்ன?

தீஷு: வாயால தான்.

2. பக்கில் (Buckle) போட கற்றுக் கொடுக்க, தீஷுவின் பழைய உடையில் பக்கில் பகுதியை கிழித்து வைத்திருந்தேன். அதை தன் வாத்து பொம்மைக்கு உடை போல் போட விரும்பினாள். சிறு பகுதி மட்டுமே இருந்ததால் போட முடியாது என்றேன். அவள் "சும்மா போட்டு, அந்த கயிறை கட்டி விடு.." என்றாள். கட்டி விட்டவுடன் கீழ் பகுதி அவிழ்ந்து விடும் போல் இருந்தது.. இப்ப என்ன செய்வது என்பது போல் அவளைப் பார்த்தேன். "கீழ பின் போட்டு விடு" என்றாள். போட்டவுடன் அழகாக பொருந்தியது. அதைப்பார்த்தவுடன் தீஷுவிற்கு மிகுந்த சந்தோஷம்.. "இதத்தான் சொன்னேன்..போடலாமினு.. இதுக்குப் போய் பயந்துக்கிட்டு"..


3. "அம்மா, லாரி எப்படி ஓட்டணும்?"

"கார் மாதிரி தான்"

"ஓ.. கலெட்ச் பிடிச்சி, கியர் பிடிச்சி, பிரேக் பிடிச்சா ?"

4. தினமும் தீஷுவை பள்ளியில் விட்டு விட்டு அப்பா ஆபிஸ் போவார்..

"அப்பா, இன்னைக்கு கார்ல ஸ்கூலுக்குப் போகலாம்"

(டிராபிக்க்குப் பயந்த அப்பா) "டெய்லி கார்ல வந்தா ஆபிஸ்ல திட்டுவாங்கடா"

சற்றும் தாமதிக்காமல் "நீ என்னைய டிராப் பண்ணு, வீட்டு வா, தருணுடைய அவ்வாகிட்ட கீய வாங்கி, கதவ திறந்து, கார் கீய வச்சிட்டு, வண்டி கீய எடுத்துட்டு, கதவ மூடி, திறம்ப அவுங்கிடா கீய குடுத்துட்டு, நீ ஃபைக்கில ஆபிஸ் போ"

3 comments:

  1. அம்மா : (ஆச்சரியமாக) எப்படிடா கரெக்டா சொன்ன?

    தீஷு: வாயால தான். //

    நாம எல்லோரும் வாயை கொடுத்துதான் வாங்கிக்கட்டிக்கறோம் போல..

    சான்சே இல்லங்க, சத்தம் போட்டு சிரிச்சிட்டேன் :))

    கார் கீ // அதுவும் சூப்பர்.

    ReplyDelete
  2. 1, 3 - குழந்தைகளின் யோசிக்கும் திறனுக்கு எடுத்துக்காட்டு.

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost